ADDED : அக் 28, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: குடிபோதையில் ஆபாசமாக பேசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெடுங்காடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அன்னவாசல் பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய காளியாகுடி பழையார் தெற்கு தெருவை அரவிந்த்,28; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று, நிரவி பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நிரவி, பழைய பஜார் தெருவை சேர்ந்த முகமது ஓவிஸ்,39; என்பவரையும், திருப்பட்டினத்தில் வீரபாண்டிய நகர் சிவசங்கரன், 29; என்பவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

