ADDED : ஏப் 06, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று மாலை வைத்திக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு நின்று கொண்டிருந்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திநாராயணன், 22; முகிலன், 20; தீபக், 19, என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.
போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

