/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார்பெண்டர் கொலையில் 3 பேர் கைது
/
கார்பெண்டர் கொலையில் 3 பேர் கைது
ADDED : பிப் 05, 2026 07:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாரில் ஏற்பட்ட தகராறில் கார்பெண்டரை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த இடையஞ்சாவடியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் வினோத் (எ) வினோத் குமார் 38; கார்பெண்டர். இவர், நேற்று முன்தினம் ஆலங்குப்பத்தில் உள்ள பாரில் மது அருந்திக் கொண்டிரு ந்தார். அப்போது, அங்கு மது அருந்திய சிலருடன் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார்.
புகாரின் பேரில், தன்வந்தரி ந கர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, வினோத்தை கொலை செய்தது, துருவை (ஓட்டம்பாளையம்) சேர்ந்த பரசுராம் மகன் கார்த்திகேயன், 35; எட்டியன் மகன் சஞ்சய், 24; ஜானகிராமன், 36; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய அரியை தேடி வருகின்றனர்.

