/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்குகள் மோதல் 3 பேர் படுகாயம்
/
பைக்குகள் மோதல் 3 பேர் படுகாயம்
ADDED : அக் 14, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பைக்குகள் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
பாகூர் புதுநகர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகேஸ்வர்மன், 31. இவர் கடந்த 9ம் தேதி இரவு தனது பல்சர் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காட்டுக்குப்பம் சந்திப்பு அருகே பைக் மீது எதிரே வந்த கடலுார், அண்ணா நகரைச் சேர்ந்த அச்சுதன் என்பவர் ஓட்டி வந்த புல்லட் மோதியது.
இதில், சாலையோரம்நின்றிருந்த காட்டுகுப்பத்தை சேர்ந்த பருதி, 51, என்பவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.