ADDED : ஆக 20, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை போலீசார் நேற்று இரவு 7:45 மணியளவில் ரோந்து சென்றனர். கடற்கரை சாலை லே-கபே பகுதியில் 3 பேர்நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும்பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார்பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் அருப்புகோட்டையைச் சேர்ந்த அஜித்குமார், 34; துரைமுருகன், 29; மாரேஸ்வரன், 47, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.