ADDED : ஏப் 25, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முன்விரோதத்தில் மீனவரை தாக்கிய தந்தை மற்றும் மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் புருேஷாத்தமன், 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரிஷிகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரிஷிகேஷ், கட்டையால் புருேஷாத்தமனை தாக்கினார். மேலும், ரிஷிகேஷின் தந்தை ஆறுமுகம், அவரது இளைய மகன் வருண்தாகர் ஆகிய மூவரும் சேர்ந்து புருேஷாத்தமனை தாக்கினர்.
காயமடைந்த புருேஷாத்தமன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆறுமுகம் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
