/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ. 1.33 லட்சம் மோசடி
/
3 பேரிடம் ரூ. 1.33 லட்சம் மோசடி
ADDED : பிப் 11, 2026 04:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1.33 லட்சம் இழந்துள்ளனர்.
கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தே பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.
இதைநம்பிய, அவர், மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 88 ஆயிரத்து 600 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், தவளக்குப்பத்தை சேர்ந்தவர் 40 ஆயிரம், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த பெண் 5 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 600 ரூபாய் இழந்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

