ADDED : அக் 25, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியாங்குப்பத்தை சேர்ந்தவரை, வாட்ஸ் ஆப்மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.
இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 4 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது .
இதேபோல், உழவர்கரையை சேர்ந்தவர் 80 ஆயிரம், நைனார்மண்டலத்தை சேர்ந்தவர் 50 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

