sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி; மாஜி அரசு ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

/

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி; மாஜி அரசு ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி; மாஜி அரசு ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி; மாஜி அரசு ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்கு


ADDED : மார் 22, 2025 09:30 PM

Google News

ADDED : மார் 22, 2025 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தீபாவளி சீட்டு நடத்தி, பலரிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்த முன்னாள் அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திலாஸ்பேட்டை, சேர்ந்தவர் எத்திராஜ், முன்னாள் அரசு ஊழியர். இவரது மகள் காவியா, மருமகன் வசந்த் ஆகியோர் பங்குசந்தை முதலீட்டாளர்களாக உள்ளனர். இவர்கள், மூவரும் இணைந்து கடந்த 2018ம் ஆண்டு தீபாவளி சீட்டு பிடித்தனர்.

இதில், தட்டாஞ்சாவடியை சேர்ந்த முஹூர்த்தம்பாள், 45; என்பவர் மாதந்தோறும் ரூ. 8 ஆயிரம் வீதம் சீட்டு கட்டி வந்துள்ளார். இதேபோல், முஹூர்த்தம்பாள் மூலம் மேலும் சிலரும் தீபாவளி சீட்டு கட்டி வந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 2019ம் ஆண்டு முஹூர்த்தம்பாள் மற்றும் சிலர் கட்டிய சீட்டு பணத்தை எத்திராஜிடம் கேட்டபோது, பணத்தை தராமல் அலைகழித்து வந்தனர்.

இதுகுறித்து முஹூர்த்தம்பாள் அளித்த புகாரின் பேரில், எத்திராஜ், காவியா, வசந்த் ஆகிய 3 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மூவரும் பலரிடம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 600 ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us