/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ.2.22 லட்சம் இழப்பு
/
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ.2.22 லட்சம் இழப்பு
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ.2.22 லட்சம் இழப்பு
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ.2.22 லட்சம் இழப்பு
ADDED : பிப் 15, 2026 06:45 AM
புதுச்சேரி: போலி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, சாரம் பெண் ரூ. 2 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தார்.
புதுச்சேரி, புது சாரத்தை சேர்ந்த பெண், கூகுல் பே ரிவார்ட்ஸ் மூலம் குறைந்த விலையில் ஏர்பாட் வாங்குவதற்கான வவுச்சர் கிடைத்துள்ளது. அதைகொண்டு ஏர்பாட்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்தபோது, அப்பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், மொபைல் செயலியை அனுப்புவதாகவும், அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கியின் விவரங்களை பதிவு செய்யும்படி கூறியுள்ளார்.
இதைநம்பி அப்பெண் தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்ட சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்து 711 மர்மநபர்கள் எடுத்து ஏமாற்றியுள்ளார். இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பெண் 8 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரம், என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 711 ரூபாய் இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

