sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை; வில்லியனூரில் நள்ளிரவில் துணிகரம்

/

அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை; வில்லியனூரில் நள்ளிரவில் துணிகரம்

அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை; வில்லியனூரில் நள்ளிரவில் துணிகரம்

அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை; வில்லியனூரில் நள்ளிரவில் துணிகரம்


ADDED : பிப் 03, 2024 07:30 AM

Google News

ADDED : பிப் 03, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : வில்லியனுாரை சேர்ந்தவர் பாலமுருகன், 40; பைபாஸ் கண்ணகி பள்ளி அருகே பேக்கரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் பேக்கரியை மூடிவிட்டு பணத்தை உள்ளேயே வைத்துவிட்டு சென்றார்.

நேற்று காலை 6:00 மணியளவில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது ஊழியர்களுக்கு சம்பளம் போட வைத்திருந்த பணம் மற்றும் கடை வசூல் பணம் என, 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அவர், வில்லியனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கடையில் இருந்த சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், பைக்கில் வந்து, கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வைத்திருந்த பெட்டியை உடைத்து, அதில் இருந்த பணத்தை மூட்டைக்கட்டி துாக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

அதே போல், வில்லியனுார் மெயின்ரோடு, மூப்பனார் காம்ப்ளக்சில் புதுச்சேரியை சேர்ந்த சேகர் என்பவர் நடத்தி வரும் காபி ஷாப் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த 95 ஆயிரம் ரொக்கம் மற்றும் அதன் அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப்பின் பூட்டை உடைத்து, 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் அதே முகமூடி அணிந்த நபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us