/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது
/
கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது
ADDED : டிச 20, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், 22; நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி, 21; மற்றும் கொம்பாக்கம் கனகவேல், 21, என, தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் மதிப்புள்ள 58 கிராம் கஞ்சா மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

