ADDED : பிப் 05, 2026 05:26 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 2.96 லட்சம் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளைத்தை சேர்ந்தவர், தனியார் வங்கி கிரெடிட் கார்டில் இருந்து அவரது அனுமதியின்றி, மர்ம நபர்கள் மோசடியாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்தவர், ரூ. 510க்கு ஆன்லைன் கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், கேரளாவில் இருந்து லாட்டரி ஏஜென்ட் பேசுவதாக கூறி, தங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ. 8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லாட்டரி பரிசு பணத்தை பெற ஜி.எஸ்.டி., மற்றும் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதைநம்பிய அவர், மர்மநபருக்கு ரூ. 36 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார்.
இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பெண் 16 ஆயிரம், கொம்பாக்கத்தை சேர்ந்தவர் 34 ஆயிரம் என, 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2 லட்சத்து 96 ஆயிரம் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

