நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, இ.சி.ஆர்., மடுவுப்பேட் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த 2 அறைகளில் பணம் வைத்து சூதாடிய லாஸ்பேட்டை வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜி, 44; கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் ஏகாம்பரம், 46; நாகம்மாள் நகர் ஏழுமலை, 45; கனகசெட்டிக்குப்பம் அன்பு, 38; புதுபேட் மேகநாதன், 46; அசோக் நகர், யுவராஜ், 46; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.22 ஆயிரம் பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

