ADDED : அக் 29, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதராப்பட்டு, காமராஜர் நகரில் கடைகளில் குட்கா விற்கப்படுவ தாக புதுச்சேரி புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி சூரிய குமார், சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், போலீசார், கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, வேல்முருகன், அஜித், ரங்கநாதன், ராமதாஸ், சுந்தரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

