sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புயல் முன்னெச்சரிக்கை ஏனாமில் தீவிரம்

/

புயல் முன்னெச்சரிக்கை ஏனாமில் தீவிரம்

புயல் முன்னெச்சரிக்கை ஏனாமில் தீவிரம்

புயல் முன்னெச்சரிக்கை ஏனாமில் தீவிரம்


ADDED : அக் 29, 2025 06:57 AM

Google News

ADDED : அக் 29, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'மோந்தா' புயல் காரணமாக ஏனாமில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

'மோந்தா'புயல் காரணமாக, ஏனாமில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டன. ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கடலும், கோதாவரி ஆறும் சேரும் இடத்தில், நீர் மட்டம் உயர்ந்தது. மேலும், சாவித்திரி நகர், தரியல திப்பா, அம்பேத்கர் நகர், ராஜிவ் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சாவித்திரி நகர், கிரியாம்பேட்டா, தரியல திப்பா ஆகிய மீனவ குடியிருப்பு பகுதிக்குள் ஆற்று நீர் உள்ளே புகுந்தது. புயல் எதிரொலியாக, இன்று (29ம் தேதி) அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us