sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ.16.38 லட்சம் மோசடி

/

3 பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ.16.38 லட்சம் மோசடி

3 பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ.16.38 லட்சம் மோசடி

3 பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ.16.38 லட்சம் மோசடி


ADDED : ஜன 10, 2025 05:46 AM

Google News

ADDED : ஜன 10, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பெண்கள் உட்பட 6 பேரிடம் 16.38 லட்சம் ரூபாய், மோசடி செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் நவநீதா. இவரை, வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டார். தங்களை டிஜிட்டல் தொடர்பான வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அதிலிருந்து விடுவிக்க பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார். அதற்கு பயந்து, 9.69 லட்சம் அனுப்பி ஏமாந்தார்.

முதலியார்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், தங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அதில், போதை பொருள்கள் இருப்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மும்பை போலீசார் வீடியோ காலில் பேச உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, வீடியோ காலில் போலீஸ் அதிகாரி போல வந்த நபர், இவ்வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார். அதனால் பயந்து அவர், 5.03 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த கிருத்திகாதேவி, 54 ஆயிரம், காரைக்கால் கங்காதரன் 46 ஆயிரம், லாவண்யா, 46 ஆயிரம், லாஸ்பேட்டை ராமகிருஷ்ணன், 20 ஆயிரம் ரூபாய் ஏமாந்தனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us