/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்
/
கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்
கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்
கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்
ADDED : செப் 27, 2024 05:21 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை நுாறடி சாலை வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. வங்கி பொது மேலாளர் செந்தமிழ்ச் செல்வன் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா 2023-24ம் நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.
வங்கி மேலாண் இயக்குநர் குமரன், 2023-24ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையும், அதனை தொடர்ந்து, 2025-26ம் ஆண்டு உத்தேச வரவு - செலவு திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ந்து, தணிக்கை அறிக்கை மற்றும் வரவு - செலவு திட்டங்களுக்கு பொதுப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், கூட்டுறவு துறை அதிகாரிகள், உறுப்பினர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். உதவி பொது மேலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.