sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

/

தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

41


UPDATED : அக் 04, 2025 05:41 PM

ADDED : அக் 04, 2025 02:04 PM

Google News

41

UPDATED : அக் 04, 2025 05:41 PM ADDED : அக் 04, 2025 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக, சென்னை நீலாங்கரை வீட்டில் வைத்து மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் இன்று (அக் 04) காலை மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

ஆனால் அங்கு அவர் இல்லை. பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us