sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பழ வியாபாரியிடம் 9 சவரன் தாலி செயின் பறிப்பு

பழ வியாபாரியிடம் 9 சவரன் தாலி செயின் பறிப்பு

பழ வியாபாரியிடம் 9 சவரன் தாலி செயின் பறிப்பு


ADDED : பிப் 03, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 06:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பைக்கில் அமர்த்திருந்த பழ வியாபாரியிடம் 9 சவரன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி விஜயகுமாரி, 57; இவர் மாத்துார் இ.சி.ஆரில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 31ம் தேதி இரவு 10.00 மணியளவில் கடையை மூடிவிட்டு கணவரோடு வீட்டிற்கு செல்ல பைக்கில் அமர்ந்து புறப்பட தயரானார்.

அப்போது இவரது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் விஜயகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

அப்போது தாலி செயினில் இருந்த மாங்கல்யம், காசு உள்ளிட்டவை அறுந்து கீழே விழுந்தது. 9 சவரன் செயினை மட்டும் மர்ம நபர் பறித்துகொண்டு தப்பினார்.

இதில் காயமடைந்த விஜயக்குமாரியை உடனே கலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின் நேற்று விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து தாலி செயினை பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us