ADDED : ஏப் 20, 2026 06:29 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மது போதையில் மயங்கி விழுந்து இறப்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாரம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 41. இவர் தனது மனைவி மகள்களை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் வேலைக்கு செல்லாமல், தொடர்ந்து குடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை அவர் வீட்டு வாசலில் வந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அந்தோணிராஜ் இறந்ததை உறுதி செய்தனர். புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
