/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோஸ்டல் கார்டு கமாண்டர் கவர்னருடன் சந்திப்பு
/
கோஸ்டல் கார்டு கமாண்டர் கவர்னருடன் சந்திப்பு
ADDED : பிப் 23, 2024 03:34 AM

புதுச்சேரி: கவர்னர் தமிழிசையை, இந்திய கடலோர காவல்படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா பேசினார்.
இந்திய கடலோர காவல்படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதியின் கமாண்டராக டி.ஐ.ஜி.,டஸிலா அன்மையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
மரியாதை நிமித்தமாக நேற்று ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதிகளான விழுப்புரம், புதுச்சேரி, கடலுார் , நாகப்பட்டினம், காரைக்கால் கடலோர பாதுகாப்புகள் பற்றியும் மற்றும் புதுச்சேரியில் புதிதாக அமையவுள்ள கடலோரப் காவல் படையின் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து இருவரும் கலந்துரையடினர்.