/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு வலை
/
சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு வலை
ADDED : செப் 30, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 65; இவர், 7 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து செ ன்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து பாகூர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.