ADDED : ஆக 27, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆவணி அவிட்ட பூணுால் மாற்றம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆவணி அவிட்டத்தையொட்டி, யஜூர் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. காலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ச் வீதம் பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.
நிகழ்ச்சியில் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான, பிராணர்கள் பங்கேற்று பூணுால் மாற்றிக் கொண்டனர்.
