ADDED : ஆக 27, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் வாழும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும். இதனால், அவர்களின் சமூக பொருளாதார மேம்பாடு திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
பாண்டி மெரீனா கடற்கரையில் இருந்து நரம்பை வரை கடற்கரை சாலை அமைக்க வேண்டும். சங்கராபரணி ஆற்றை, அரியாங்குப்பம் ஆற்றுடன் இணைக்க வேண்டும். முருங்கப்பாக்கத்தில் படுகை அணை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
