/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு கூடுதல் நீர்: அமைச்சர் வலியுறுத்தல்
/
புதுச்சேரிக்கு கூடுதல் நீர்: அமைச்சர் வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு கூடுதல் நீர்: அமைச்சர் வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு கூடுதல் நீர்: அமைச்சர் வலியுறுத்தல்
ADDED : டிச 20, 2024 03:48 AM

புதுச்சேரி: டில்லி வித்யான்பவனில் நடந்த தேசிய நதிநீர் இணைப்பு நிறுவனத்தின் 38வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது;
கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பின் தற்போதைய மறுமதிப்பீட்டின் அடிப்படையில் கிருஷ்ணா நதியின் பேடி வரதா இணைப்பையும் சேர்த்து 4,189 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும்.
அதில் புதுச்சேரிக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு 27 மில்லியன் கனமீட்டர், தொழில் துறைக்கு 35 மில்லியன் கனமீட்டர் என 2.20 டி.எம்.சி., நீர் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு நீர் பங்களிப்பு தரப்படவில்லை.
புதுச்சேரி குடிநீர், பொதுப் பயன்பாடு, தொழிற் துறை மற்றும் விவசாயம் அனைத்திற்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. அதிகப்படியாக நீர் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைகிறது. தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் பாசனத்திற்காக புதுச்சேரிக்கு 2.75 டி.எம்.சி., நீர் கூடுதலாக தர வேண்டும்.
புதுச்சேரி சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பின் மூலம் புதுச்சேரி மாநிலம் அதற்கான நீர் பங்கீட்டளவை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது போல் புதுச்சேரிக்கும் அளிக்க வேண்டும்.
இந்த நீர் பங்களிப்பு காவிரி நீர் ஆணையத்தால் காரைகால் பகுதிக்கு அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவான 7 ஆயிரம் மில்லியன் கன அடியுடன் கூடுதலாக புதுச்சேரிக்கு தரவேண்டும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, இதற்கான நிதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என்றார்.