sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

/

போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


ADDED : செப் 25, 2024 06:28 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்தது தொடர்பாக, திருநள்ளாறு வட்டார காங்., தலைவர் சிவக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.

காரைக்கால், திருநள்ளாறு அடுத்த தக்களூர் கிராமத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருலோகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. கோவில், காரைக்குடியை சேர்ந்த நாகராஜ் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் போலியான ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த நித்தியானந்தம், சிவக்குமார் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருநள்ளாறு வெள்ளாழர் தெருவை சேர்ந்த நாதன் என்பவர் திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், திருலோகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்திற்கு கடந்த 2008ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து, திருநள்ளாறு பகுதியில் வசித்த நித்தியானந்தம் என்பவர், திருநள்ளாறு சுப்ராயபுரம் சாலையை சேர்ந்த வட்டார காங்., தலைவர் சிவக்குமார், 57; என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சிவக்குமார், தனது தாய் மற்றும் உறவினர்கள் பெயரில் பல முறை மாற்றி பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. அதையடுத்து சிவக்குமார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். அதை தொடர்ந்து, சிவக்குமார் தலைமறைவானார்.

இந்நிலையில், சிவக்குமார் குறித்து விபரம் தெரிந்தால் காரைக்கால் எஸ்.பி., 94892 05353, திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் 04368 -236465 ஆகிய எண்களில் தெரிவிக்குமாறும், தகவல் தெரிவிப்பவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us