/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்
/
விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்
விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்
விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்
ADDED : மார் 07, 2026 05:39 AM

புதுச்சேரி: இந்திரா தொகுதியில் ராஜா குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மகளிர் காங்., கட்சியில் நேற்று இணைந்தனர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட உள்ள ராஜா குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று இந்திரா நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரத்னா முன்னிலையில் ராஜாகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தொகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மகளிர், காங்., கட்சியில் இணைந்தனர்.
அவர்களை பாராட்டி, காங்., கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலதிட்டங்களை விளக்கிக் கூறினர். கூட்டத்தில் மாநில மூத்த துணை தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு, ராஜாகுமார் தொகுதியில் வெற்றி பெற்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்வார்' என்றார்.
கட்சியில் இணைந்த அனைத்து மகளிர்களுக்கும் ராஜாகுமார் பரிசுகள் வழங்கினார்.

