ADDED : மார் 02, 2026 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நெட்டப்பாக்கம், கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் (1978-79, 1979-80) ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் 5 ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
உருளையன் பேட்டை, கென்னடி நகர் லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெய்வநாயகம் தலைமை தாங்கினார். வடமலை வரவேற்றார். புண்ணியமூர்த்தி வரவு - செலவு கணக்கு சமர்ப்பித்தார்.
கீதா 'நட்பு ஒரு போதும் முடிவதில்லை' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில், கடந்த ஆண்டு உடல்நல குறைவால் இறந்த 2 பேரின் உருவப்படத்தை திறந்து, அவர்களது குடும்பத்தினருக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
அசோகன் நன்றி கூறினார். குமரகுரு தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை முரளிதரன், ராமலிங்கம், முத்துராமன், பாலு மற்றும் பலர் செய்திருந்தனர்.

