sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

/

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 15, 2025 02:47 AM

Google News

ADDED : மே 15, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.

வில்லியனுார் முருங்கப்பாக்கம், அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வுஎழுதினர். மொத்தம் 156 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

பள்ளி அளவில் மாணவர் பரணிதரன் 500க்கு 481 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் தனுஷ் 479 பெற்று 2ம் இடம், மாணவர் ஹரிகரன் 478 பெற்று 3ம் இடத்தை பிடித்தனர். 100 மாணவர்கள் 75 சதவீதத்துக்கு மேலும், 56 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியலில் 1, கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

இதே பள்ளியில் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 205 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். பள்ளி அளவில் மாணவர் ஆகாஷ் 500க்கு 494 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ஸ்ரீராம் 492 பெற்று 2ம் இடம், மாணவி வனிஸ்வா 489 பெற்று 3ம் இடத்தை பிடித்தனர்.

75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்கள், 60 சதவீதத்துக்கு மேல் 15 மாணவர்கள் பெற்றுள்ளனர். தமிழில் 8, கணிதத்தில் 4, அறிவியலில் 1, பி.ஏ.டி.,யில் 103 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் லுார்துசாமி வாழ்த்தினார்.

அவர், கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் பரணிதரனுக்கு 4 கிராம், 2ம் இடம் பிடித்த தனுசுக்கு 2 கிராம், மூன்றாம் இடம் பிடித்த ஹரிகரனுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் ஆகாசுக்கு 4 கிராம், 2ம் இடம் பிடித்த மாணவர் ஸ்ரீராமிற்கு 2 கிராம், 3ம் இடம் பிடித்த மாணவி வனிஷ்வா ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி' என்றார்.






      Dinamalar
      Follow us