/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை துவக்கம்
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை துவக்கம்
ADDED : ஜூன் 05, 2025 07:19 AM
புதுச்சேரி; உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அலகு, கத்தி அபிேஷகம் நாளை நடக்கிறது.
உருளையன்பேட்டையில் சித்தி விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 4ம் ஆண்டு அம்மன் பண்டிகை நேற்று மாலை வாஸ்த்து சாந்தியுடன் துவங்கியது.
இன்று (5ம் தேதி) காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஜை துவஜாரோகணம், காலை 8:00 மணிக்கு லஷ்மி கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, காலை 11:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சம்வஸ்த்திர கலசாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு அம்மன் உள்புறப்பாடு நடக்கிறது.
நாளை (6ம் தேதி) காலை 6:00 மணிக்கு அபிேஷகம், காலை 9:00 மணிக்கு அம்மன் பண்டிகை, சக்தி வழிபாடு, கரக வீதியுலா, மதியம் 12:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அலகு, கத்தி அபிேஷகம், 1:00 மணிக்கு அலகு நிறுத்துதல், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
மாலை 3:00 மணிக்கு ஜோதிமாவு கூட்டுதல், இரவு 7:00 மணிக்கு ஜோதி வழிபாடு, 8:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் ஜோதி வீதியுலா நடக்கிறது.
வரும் 7ம் தேதி அம்மன் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.