sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஏப் 03, 2025 04:00 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கடந்த 26ம் தேதி இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தற்காலிக பஸ் நிலையம் அருகே போலீசாரை கண்ட வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை விரட்டி பிடித்த போலீசார், நடத்திய சோதனையில், 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி, ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சித்தானந்தம், 20; என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி, புதுச்சேரியில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சித்தானந்தத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, அவர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தை சேர்ந்த அசாருதீன், 24; என்பவரை உருளையன்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அசாருதீன் உருளையன்பேட்டை அம்மன் நகரில் உள்ள சரவணன் என்பவரது மாடிவீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு சென்றபோது, அசாருதீன் போலீசாரை கண்டவுடன், மாடியில் இருந்து கீழே குதித்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தொடர்ந்து, அசாருதீனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அசாருதீன் மீது ஏற்கனவே, உருளையன்பேட்டை போலீசில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us