/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 05, 2024 06:46 AM
புதுச்சேரி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
வரும் மார்ச், ஏப்ரல் -2025ல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை 6ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, (இதில் 8, 15ம் தேதி ஞாயிற்று கிழமை நீங்கலாக) கீழ்கண்ட மையங்களில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் சேவை மையம், முத்திரையர்பாளையம் மேல்நிலைப் பள்ளி, முத்திரையார்பாளையம்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கான சேவை மையம்விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, செல்லபெருமாள்பேட்டை;பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சேவை மையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, ரெட்டியார்பாளையம்; பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கான சேவை மையம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.தேர்வுக கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.