sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

/

 குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

 குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

 குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


ADDED : ஜன 05, 2026 04:28 AM

Google News

ADDED : ஜன 05, 2026 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

மதகடிப்பட்டில் மத்திய அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்திப்பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத குண்டான் குழி மகாதேவர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சமீபத்தில் புதிதாக வந்துள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி சிலைக்கு கடந்த 29ம் தேதி மாலை 4:00 மணிக்கு கரிக்கோல விழா நடந்தது.

கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 5:00 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதில் மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு குண்டான்குழி மகாதேவர் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளனமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மதகடிப்பட்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us