தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் இயக்குநருக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ., நன்றி

ஜிப்மர் இயக்குநருக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ., நன்றி

ஜிப்மர் இயக்குநருக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ., நன்றி


ADDED : ஏப் 04, 2025 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மரில் புதுச்சேரி புற நோயாளிகளுக்காக தனி கவுண்டரை திறந்த ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேஹியை அசோக் பாபு எம்.எல்.ஏ., சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை அண்மையில் சபாநாயகர் செல்வம், அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில நோயாளிகளுக்கு புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தனியாக 2 கவுண்ட்டர்களை திறக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து, அமைச்சர் நட்டா உத்தரவின் பேரில், ஜிப்மரில் தனியாக புதுச்சேரி நோயாளிகளுக்கு இரண்டு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டது. இதேபோல், ஜிப்மரில் புதுச்சேரி முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த புற நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை புரிவதற்கு முதன்மை இணைப்பு அதிகாரியாக டாக்டர் பிரார்த்தனா நியமனம் செய்யப்பட்டார்.

கோரிக்கைகளை நிறைவேற்றிய ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேஹியை மத்திய சுகாதார அமைச்சர் நட்டா சார்பாக அசோக் பாபு எம்.எல்.ஏ., சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us