ADDED : பிப் 29, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடிக்க பணம் தராத முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம் தெற்கு கணபதி நகரைச் சேர்ந்தவர் மணி 60, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் வண்ணாகுளம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ராமு 23, மணியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு மணி கொடுக்க மறுக்கவே, அவரை அசிங்கமாக பேசி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். பலத்தகாயமடைந்த மணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து ராமுவை தேடி வருகின்றனர்.

