ADDED : செப் 17, 2025 11:03 PM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், வட்டம்- 3 சார்பில், பள்ளிகளுக்கு இடையேநடந்த தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்வித்துறை, வட்டம் -3 சார்பில், பள்ளிகளுக்கு இடையே தடகள போட்டிகள் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், 14 முதல் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என 52 பள்ளிகள் பங்கேற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
வாணிதாசனார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அமைப்பு செயலாளர் தணிகைகுமரன் நன்றி கூறினார்.