ADDED : பிப் 04, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் வலிபரை வழிமறைந்த தாக்கிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் நாகரத்தினம் மகன் மாதவன்,29; மீனவர். இவரது நண்பர் நித்தின் என்பவரின் திருமண அழைப்பிதழ் வைப்பதற்கு நேற்று முன்தினம் மாதவன்,நித்தின் இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது அக்கம் பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் முன்விரோத காரணமாக காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்த பூபதி மகன் கதிர், 25; துரைசாமி மகன் விக்னேஷ், 25; ஆகிய இருவரும் மாதவனை வழிமறித்து தாக்கினர்.
இதில் காயமடைந்த மாதவனை உடன் நித்தின் அரசு மருந்துவமனையில் சேர்த்தார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் கதிர்,விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

