ADDED : நவ 13, 2024 06:42 AM
புதுச்சேரி : துணி காய வைப்பதில் ஏற்பட்ட தகராறில், தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருவடிக்குப்பம், இடையன்சாவடி சாலையைச் சேர்ந்த குணசேகர் மனைவி மனோகரி, 34; இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் பிரியா.
இவர், பொதுவான துணி காய வைக்கும் கொடி கம்பத்தில், துணிகளை காய வைத்திருந்தார்.
காய்ந்த துணிகளை எடுத்தால் தன்னுடைய துணிகளை காய வைக்க முடியும் என, மனோகரி பிரியாவிடம் தெரிவித்தார்.
இதனால், அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பிரியா தனது கணவர் பார்த்தசாரதிக்கு போன் செய்து வரவழைத்தார்.
இரவு 9:00 மணிக்கு பார்த்தசாரதியுடன் வந்த 4 பேர் மனோகரி மற்றும் அவரது கணவர் குணசேகரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மனோகரி, குணசேகரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மனோகரி புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் பிரியா மற்றும் அவரது கணவர் பார்த்தசாரதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.