sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உணவு டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்

/

உணவு டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்

உணவு டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்

உணவு டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்


ADDED : ஜன 09, 2025 05:58 AM

Google News

ADDED : ஜன 09, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: விழுப்புரம் மாவட்டம் சேஷாங்கனுார் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயன், 31. இவர் புதுச்சேரி, வெங்கடா நகரில் தங்கி உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி மதியம் முள்ளோடையில் உணவு டெலிவரி செய்து விட்டு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார்.

அங்குள்ள தனியார் பார் எதிரே சென்ற போது, எதிரே தவறான பாதையில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், உதயா மீது மோதி உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உதயனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, அவரது மொபைல் போனை பிடுங்கி உடைத்து வீசி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த உதயன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us