sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நிரந்தரப்பணி வழங்க கோரி கடலில் இறங்கி போராட முயற்சி

/

நிரந்தரப்பணி வழங்க கோரி கடலில் இறங்கி போராட முயற்சி

நிரந்தரப்பணி வழங்க கோரி கடலில் இறங்கி போராட முயற்சி

நிரந்தரப்பணி வழங்க கோரி கடலில் இறங்கி போராட முயற்சி


ADDED : ஜூன் 26, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பொதுப்பணித்துறையில் நிரந்தர பணி வழங்க கோரி, கடலில் இறங்கி போராட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுப்பணித்துறையில் வாரிசு தாரர்கள் 192 பேருக்கு நிரந்த பணிக்கு பதிலாக, வவுச்சர் ஊழியர்களாக 18 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிரந்தர பணி கிடையாது என, அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து, நிரந்தர பணி வழங்க கோரி, வாரிசு தாரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு, பொதுப்பணித் துறை வாரிசு தாரர்கள் சங்க தலைவர் ஜெயசந்திரன் தலைமையில், துணை தலைவர் சந்தியபிரகாஷ் முன்னிலை நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கடலில் இறங்கி போராட்டம் நடத்த சென்றனர்.தகவலறிந்த, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பெரியக்கடை போலீசார் கடலில் இறங்க முன்றவர்களை தடுத்தி நிறுத்தி, அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us