/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார் தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி
/
பார் தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி
பார் தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி
பார் தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி
ADDED : ஏப் 17, 2025 04:47 AM
புதுச்சேரி: ரெஸ்டோ பாரில் ஏற்பட்ட தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் வசந்தராமன், 22; தனியார் ரெஸ்டோ பாரில் பவுன்சராக வேலை செய்து வருகிறார்.கடந்த 13ம் தேதி இரவு வசந்தராமன் வேலை முடிந்து, தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பெருமாள் கோவில் வீதி சந்திப்பில் வந்தபோது, பின்னால் வந்த கார்ஒன்று அதிவேகமாக வந்து வசந்தராமன் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து காயமடைந்த வசந்தராமனை, காரில் சென்றவர்கள் காரை நிறுத்தி வசந்தராமனை காயமடைந்துள்ளதை பார்த்துள்ளனர்.
அதற்குள் பொதுமக்கள் திரண்டதால், காரையை அங்கேயே விட்டு, காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
உடன் வசந்தராமனை பொதுமக்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு . பின்னர், மேல் சிகிச்கைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வசந்தராமன் புகாரின் பேரில், கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், வசந்தராமன் பணியாற்றி வரும்ரெஸ்ட்டோ பாரில் அன்று இரவு5 நபர்கள் மதுபோதையில்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்தபவுன்சர்கள் வெளியே அனுப்பியுள்ளனர்.
இதனால், கோபமடைந்த அவர்கள் பாரில் இருந்து பைக்கில் வெளியே வந்த வசந்தராமனை, காரில் பின்தொடர்ந்து வந்து கொலை செய்யும் நோக்கில் பைக் மீது மோதியது தெரியவந்தது.இதையடுத்து, போக்குவரத்து போலீசார், கொலை செய்யும் நோக்கில் விபத்து ஏற்படுத்தியதால், அந்த வழக்கு பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.