ADDED : மே 31, 2025 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி ஆதிகுடி காட்டுநாயகன் பழங்குடி மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். ஆதிகுடி காட்டுநாயகன் பழங்குடியின மக்கள் இயக்கத் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார்.
மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு செயலாளர் புருேஷாத்தமன், பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள காட்டுநாயக்கன், மலக்குறவன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை, அட்டவணை பழங்குடியினர் என, அங்கீகரிக்க வலியுறுத்தப்பட்டது.