sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜூலை 19, 2025 06:40 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கவுரவ முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பால சேவிகாக்கள் ஆகியோருக்கு, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர் போராட்டம் அறிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் நுழைவு வாயிலில் கோரிக்கைகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாரி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலகுமார், ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் அருள்சாமி, சிரில் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்புரையாற்றினார். இதில் பால சேவிகாக்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பொற்செழியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us