sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆரோவில்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சியான பழங்கள், மோர் வழங்கல்

/

ஆரோவில்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சியான பழங்கள், மோர் வழங்கல்

ஆரோவில்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சியான பழங்கள், மோர் வழங்கல்

ஆரோவில்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சியான பழங்கள், மோர் வழங்கல்


ADDED : ஏப் 27, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: ஆரோவில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு, கோடை வெயில் காரணமாக குளிர்ச்சியான பழங்களுடன், இலவச நீர் மோர் வழங்கும் பணி துவங்கியது.

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மாத்ரி மந்திர், விசிட்டர் சென்டர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை காண தினமும் ஏராளமான சுற்றுாலப் பயணிகள் வருகின்றனர்.

விசிட்டர் சென்டரில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மாத்ரி மந்திர் பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல வேண்டும்.

கோடைக்காலம் துவங்கி விட்டதால், ஆரோவில் வரும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால் பயணிகளுக்கு ஆரோவில் அறக்கட்டளை மூலம், இலவச நீர் மோர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.

இதனை ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, துவக்கி வைத்து கூறுகையில், 'தினந்தோறும் சராசரியாக 3000 பேரும், வார இறுதி நாட்களில் 8000 பேர் ஆரோவில் வருகின்றனர்.

வெயில் வாட்டி வதைத்து வருவதால், ஆரோவில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீர் மோர் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான பழங்களும் வழங்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறுவார்கள்' என்றார்.

நிகழ்ச்சியில், பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜென்மஜெய் மோகந்தி, டிரீமஸ் காபே நிறுவனர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us