ADDED : ஜூலை 26, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச் சேரி, அய்யப்பன் நகரை சேர்ந்தவர் முரளிதரன், 56; ஆட்டோ டிரைவர். இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நி லையில், அய்யப்பன் நகர் அருகே நேற்று முன்தினம் முரளிதரன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் பூச்சு மருந்து பாட்டில் கிடந்தது.
இதுகுறித்து, அவரது மகன் நவீன் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.