sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

/

ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


ADDED : ஜூலை 08, 2025 06:21 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மேட்டுப்பாளையம் சி.என்.ஜி., காஸ் நிரப்பும் நிலையம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

புதுச்சேரியில் காஸ் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சி.என்.ஜி., பொருத்தும் காஸ் நிரப்பும் பங்க் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம் இந்தியன் ஆயில் பங்கில் இயங்கி வருகிறது. இங்கு ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சி.என்.ஜி., காஸ் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதியதாக கடந்த 1ம் தேதி முதல் புதுச்சேரியில் துப்புர பணி மேற்கொள்ளும் கிரீன் வாரியர்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கு மட்டும் காஸ் நிரப்பபடும் என மற்ற வாகனங்களுக்கு காஸ் நிரப்ப முடியாது என பங்க் தரப்பில் கூறப்பட்டது.

ஆட்டோ தொழிலாளர்களை மரியாதை குறைவாக பேசியதை கண்டித்தும், ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்ப வலியுறுத்தி நேற்று மாலை ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் பங்க் உரிமையாளரிடம் அனைத்து வாகனங்களுக்கும் காஸ் நிரப்ப வலியுறுத்தினர். அதன்பேரில், இரவு 8 மணிக்கு காத்திருந்த வாகனங்களுக்கு கேஸ் நிரப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us