/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு
/
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஏப் 05, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏரிப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுசூழல் மன்றம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் பொறுப்பாசிரியர் சந்துரு தலைமை தாங்கினார். விழாவில், மாணவர்களிடம் இயற்கை மற்றும் தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் குரோபேக் மற்றும் 5 வகையான கீரை விதைகள் வழங்கப்பட்டது.
மேலும், செயற்கை உரங்களால் ஏற்படும் தீங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடேஷ், முகிலன், காந்தி, சங்கீதா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

