/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு அரசு கல்லுாரியில் வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு
/
தாகூர் அரசு அரசு கல்லுாரியில் வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு
தாகூர் அரசு அரசு கல்லுாரியில் வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு
தாகூர் அரசு அரசு கல்லுாரியில் வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 04, 2026 04:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அப்துல் கலாம் கருத்தரங்க கூடத்தில் வரதட்சணை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு மேலாண்மை துறைத் தலைவர் வேலுராஜ், புதுச்சேரி அரசின் சட்டத் துறை சார்பு செயலர் ஜான்சி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செயலர் ஜான்சி, வரதட்சணைத் தடுப்பு சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டப்பிரிவுகள் குறித்து விளக்கி, பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இரண்டாம் ஆண்டு கணித துறை மாணவர் கோகுல்ராஜன் நன்றி கூறினார்.

