sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

/

பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி


ADDED : ஜூலை 21, 2025 04:55 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதுச்சேரி அலையான்ஸ் பிரான்ஸ்சில், பழங்கால பாறை ஓவியங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

இதில், பழங்கால வராலற்று வாழ்க்கை முறைகள், மனிதர்கள் பயன்படுத்திய விலங்குகள் என பல்வேறு ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த ஓவியங்கள், மாணவர் மற்றும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

கண்காட்சியை நடத்திய ஓவியர் முனுசாமி கூறுகையில், 'பழங்கால பாறை ஓவியங்கள் தற்போது அழிந்து வருகிறது. இந்த ஓவியங்களை பாதுகாப்பதற்கு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

விழுப்புரம் அருகே உள்ள கீழ்வலை கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு பாறைகளில், ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த ஓவியங்களின் சிறப்புகள் பற்றி புதுச்சேரி தாகூர் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கட்டுரையாக எழுதி புத்தகம் வெளியிட்டுள்ளார்.

பாறை ஓவியங்களை கிடைப்பது அரிது. அவற்றை அரசு பாதுகாத்து,பராமரிக்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us